Tuesday, April 7, 2009

அல்ஐனில் நடைபெற்ற இரண்டாவது மாபெரும் இரத்த தான முகாம்!

கடந்த 27-02-2009 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைந்துள்ள அல் அய்ன் னில் இரண்டாவதாக மாபெரும் இரத்த தான முகாமை தவாம் மருத்துவமணையுடன் இணைந்து நடத்தியது.


அதில் பெண்கள் உட்பட 52 பேர் கலந்து கொன்டனர். இதில் நமது கொள்கை சகோதரர்கள் மட்டும் இன்றி மாற்றுமத சகோதரர்களும் கலந்து கொண்டு குறுதி கொடை அளித்தது சகோதரத்துவம் மேலோங்கி நிற்பதை காட்டியது.


கடல் கடந்து பிழைப்புக்காக வந்த இடத்தில் மனித நேயம் மிக்க இரத்த தானம் செய்வதற்கு இவ்வளவு ஆர்வமாக வந்த மக்களைக் கண்டு இரத்த வங்கி ஊழியர்கள் திகைத்து நின்றனர்.

நட்புடன்

ஜலால்

அல் அய்ன்

துபாய்



No comments:

Post a Comment